- வீடு›
- செய்திகள்›
- 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டு தேர்வுகள் வருகிற ஏப்ரல் 18ம் தேதி முதல் தொடக்கம்
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டு தேர்வுகள் வருகிற ஏப்ரல் 18ம் தேதி முதல் தொடக்கம்
By: vaithegi Mon, 10 Apr 2023 2:56:52 PM
சென்னை: 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முழு ஆண்டுத்தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்த்துறை முடிவு செய்துள்ளது.
இதை அடுத்து , 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21ம்தேதி வரை சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் தற்போது சென்னையில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி முழு ஆண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்வானது வருகிற ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வு முடிவடைந்த, மறுநாள் அதாவது (ஏப்ரல் 18) முழு ஆண்டுத்தேர்வுகள் தொடங்க உள்ளது.