Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டு தேர்வுகள் வருகிற ஏப்ரல் 18ம் தேதி முதல் தொடக்கம்

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டு தேர்வுகள் வருகிற ஏப்ரல் 18ம் தேதி முதல் தொடக்கம்

By: vaithegi Mon, 10 Apr 2023 2:56:52 PM

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டு தேர்வுகள் வருகிற ஏப்ரல் 18ம் தேதி முதல் தொடக்கம்

சென்னை: 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முழு ஆண்டுத்தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்த்துறை முடிவு செய்துள்ளது.

இதை அடுத்து , 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21ம்தேதி வரை சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

general examinations,full year examinations ,பொதுத் தேர்வுகள்,முழுஆண்டு தேர்வுகள்

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தற்போது சென்னையில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி முழு ஆண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்வானது வருகிற ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வு முடிவடைந்த, மறுநாள் அதாவது (ஏப்ரல் 18) முழு ஆண்டுத்தேர்வுகள் தொடங்க உள்ளது.

Tags :