Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை துவங்க அரசு முடிவு

டெல்லியில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை துவங்க அரசு முடிவு

By: Karunakaran Sun, 30 Aug 2020 4:52:55 PM

டெல்லியில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை துவங்க அரசு முடிவு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வரும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது மெட்ரோ ரெயில் சேவைகளை துவங்க டெல்லி அரசு தயாராகி வருகிறது. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். ஸ்மார்ட் கார்டு மூலமே பயணம் செய்ய அனுமதி உண்டு. டோக்கன்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

government,metro rail service,delhi,curfew ,அரசு, மெட்ரோ ரயில் சேவை, டெல்லி, ஊரடங்கு உத்தரவு

எத்தனை பேருக்கு அனுமதி உண்டு என்பதை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. மெட்ரோ ரெயில்களில் ஏசி இயக்கப்படாது போன்ற கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட உள்ளன. டெல்லி போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் இதுகுறித்து கூறுகையில், மெட்ரோ ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்காது. குறிப்பிட்ட சில ரெயில்களில் மட்டுமே நிற்கும். ரெயில் நிலையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சமூக இடைவெளி, உடல் வெப்ப நிலை பரிசோதனை போன்ற அனைத்து பாதுகாப்பு விதிகளும் கடுமையாக பின்பற்றப்படும். தொற்று பரவலை அதிகரிக்கச் செய்யும் என்பதால் டோக்கன் முறை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|