Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு

இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு

By: Monisha Sat, 21 Nov 2020 5:39:19 PM

இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீடீரென்று தி.மு.க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே அந்தந்த கல்லூரிகளுக்கு செலுத்தும்.

edappadi palanisamy,reservation,government school,students,tuition ,எடப்பாடி பழனிசாமி,இடஒதுக்கீடு,அரசுப் பள்ளி,மாணவர்கள்,கல்விக் கட்டணம்

ஸ்காலர்ஷிப் வரும் வரை காத்திராமல் உடனடியாக செலுத்தும் வகையில் சுழல் நிதி உருவாக்கப்படும். இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி, விடுதி கட்டணத்தை ஏற்று மாணவர்களின் வாழ்வில் வசந்தத்தை அரசு ஏற்படுத்தி உள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள். அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்தே திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது நாடகம். திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் கூறினார்.

Tags :