Advertisement

தமிழக கவர்னர் நலமுடன் உள்ளார்; மருத்துவமனை அறிக்கை

By: Nagaraj Wed, 05 Aug 2020 10:30:09 PM

தமிழக கவர்னர் நலமுடன் உள்ளார்; மருத்துவமனை அறிக்கை

நலமுடன் உள்ளார்... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு காவேரி மருத்துவமனையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தீவிரசிகிச்சைக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கவர்னர் தற்போது நலமுடன் உள்ளார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

corona,treatment,governor,health,andhra ,கொரோனா, சிகிச்சை, கவர்னர், நலம், ஆந்திரா

ஆந்திரா: ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,128 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் 1,544 பேருக்கும், கர்னூலில் 1368 பேருக்கும், அனந்தபூரில் 1,260 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,86,461 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,04,354 பேர் குணமடைந்துள்ளனர், 1,681 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 80,426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|
|