Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்த தமிழக ஆளுனருக்கு சிறப்பான வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்த தமிழக ஆளுனருக்கு சிறப்பான வரவேற்பு

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:54:14 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்த தமிழக ஆளுனருக்கு சிறப்பான வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கவர்னரை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் பூரண கும்பத்துடன் வரவேற்பு அளித்தனர். ஆண்டாள் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் ஆளுநர் சென்று தரிசனம் செய்தார்.

கோவிலில் உள்ள ஓவியங்களையும் சிற்பங்களையும் கண்டு வியந்தார். அதன்பின் ஆண்டாள் கோவிலின் பிரதான கோபுரமான திருப்பாவை தங்க கோபுரத்தை பார்வையிட்டார். ஆண்டாள் பிறந்த நந்தவனத்தையும் சாமி தரிசனம் செய்தார். வடபத்ர சாயனார் என்றழைக்கப்படும் பெரிய பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தமிழக அரசின் சின்னமான பெரிய கோபுரத்துக்குச் சென்றார்.

andal,darshanam,governor,rn ravi,temple, ,ஆண்டாள், ஆர்.என்.ரவி, கவர்னர், கோவில், சாமி, தரிசனம்

அவருக்கு ஆண்டாள்கோவில் சார்பில் அதிகாரிகள் நினைவு பரிசு வழங்கினர். கோவில் சார்பில் ஆண்டாள் கிளி, பிரசாதம் வழங்கப்பட்டது. ஆளுநருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலில் சுமார் 45 நிமிடம் தங்கியிருந்த கவர்னர், கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக ராஜபாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Tags :
|
|