Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்

By: Nagaraj Thu, 03 Sept 2020 10:15:25 AM

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்

பிரதமருடன் சந்திப்பு... கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் இதன்போது பிரதமருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

அத்துடன், கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

meeting,alari hall,prime minister,eastern province ,சந்திப்பு, அலரிமாளிகை, பிரதமர், கிழக்கு மாகாணம்

இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :