Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ... ஐகோர்ட்டு இன்று வழங்குகிறது

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ... ஐகோர்ட்டு இன்று வழங்குகிறது

By: vaithegi Wed, 17 Aug 2022 06:27:20 AM

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு  ...   ஐகோர்ட்டு இன்று வழங்குகிறது

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்தது. இக்கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனவே இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது.

court,o. panneerselvam ,ஐகோர்ட்டு , ஓ.பன்னீர்செல்வம்

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே இதன்படி, இவ்வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் நீதிபதி விசாரித்தார்.

அதன் பின் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று (புதன்கிழமை) பிறப்பிக்கிறார்.

Tags :
|