Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர்

மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர்

By: Nagaraj Sat, 12 Aug 2023 5:17:52 PM

மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர்

புதுடில்லி: மக்களவையில் தாக்கல்... பழைய சட்டங்களுக்கு மாற்றாக இந்தி பெயருடன் 3 குற்றவியல் சட்ட மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய 3 மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.

புதிய மசோதாவில் தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்யும் வழிகள் உள்ளன. சிறு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சேவையில் ஈடுபடச் செய்யவும் விதிகள் உள்ளன.

union minister,lok sabha,death penalty,criminals,filing ,மத்திய அமைச்சர், மக்களவை, மரண தண்டனை, குற்றவாளிகள், தாக்கல்

பிரிவினைவாத செயல்கள், ஆயுத கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களும் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க இச்சட்டங்கள் வழி செய்கின்றன. திருமண ஆசை காட்டி அல்லது பதவி உயர்வு, வேலை வாய்ப்புக்காக பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்படும்.

கும்பல் வன்முறைகளால் படுகொலை நிகழும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கவும் புதிய சட்டங்களில் விதிகள் உள்ளன. அதிகபட்சமாக 3 ஆண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Tags :