Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

By: vaithegi Sun, 13 Aug 2023 10:00:08 AM

அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக காரில் சென்று உள்ளார்.

இதையடுத்து அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துமவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத்தொல்லை ஏற்பட்டது தெரியவந்தது.

hospital,anpil mahesh poiyamozhi,department of education ,மருத்துவமனை ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,பள்ளிக்கல்வித்துறை

எனவே அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. எனினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் அன்பில் மகேஷ் , மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள நாராயணா இருதயாலயா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் பெங்களூரு மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Tags :