தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
By: vaithegi Fri, 01 July 2022 9:21:33 PM
தமிழகம்: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆவது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்து வருகிறது.
நேற்று ஒருநாள் பாதிப்பு மட்டும் 2,069- ஆக இருந்த நிலையில், இன்று அதை விட சற்று அதிகமாக 2,385 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று மட்டும் 909 ஆக இருந்த பாதிப்பு இன்று 1,025 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 369, திருவள்ளூர்-121, கோவை 118, கன்னியாகுமரி 72, காஞ்சிபுரம் 84, திருச்சி 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனாவில் இருந்து 1,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 12 ஆயிரத்து 158 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.