Advertisement

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது

By: Nagaraj Sun, 16 Apr 2023 3:31:28 PM

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது

புதுடில்லி: பாதிப்பு சற்று குறைந்துள்ளது... நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்றைய கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

சனிக்கிழமை நேற்று (ஏப்.15) 1,386 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 5 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. எனினும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,720- ஆக அதிகரித்துள்ளது.

health department,data,corona,infection,recovered ,சுகாதாரத்துறை, தரவுகள், கரோனா, தொற்று, குணமடைந்தனர்

கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,091 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தில்லியில் 6 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 4 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர், குஜராத், ஹிமாசல், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். மத்திய சுகாதாரத் துறை தரவுகளின்படி 4.42 கோடி பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|