Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ரெயில் சேவைகளின் வேகம் அதிகரி ப்பு ... ரெயில் பயணிகளின் பயண நேரம் குறைப்பு

இந்த ரெயில் சேவைகளின் வேகம் அதிகரி ப்பு ... ரெயில் பயணிகளின் பயண நேரம் குறைப்பு

By: vaithegi Tue, 04 Oct 2022 06:53:52 AM

இந்த ரெயில் சேவைகளின் வேகம் அதிகரி ப்பு ...  ரெயில் பயணிகளின் பயண நேரம் குறைப்பு

சென்னை; பயணிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய நடைமுறை திட்டங்களை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு ரெயில்கள் 130 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் அக்டோபர் 1-ந்தேதி முதல் ரெயில் சேவைகளின் வேகம் உயர்த்தப்பட்ட ரெயில்கள் கீழ்வருமாறு:- சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் பயண நேரம் 90 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பயண நேரம் 70 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. திருப்பதி-சென்னை இடையே இயக்கப்படும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் நேரம் குறைக்கப்பட்டது.

train service,travel time,reduction ,ரெயில் சேவை, பயண நேரம் ,குறைப்பு

இதையடுத்து கோவை-சென்னை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்பட்டது. * குஜராத் மாநிலம் அமதாபாத்-சென்னை இடையே இயக்கப்படும் 'ஹம்சபர்' எக்ஸ்பிரஸ் 25 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் ஏக்தாநகர்-சென்னை எக்ஸ்பிரஸ் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.

மேலும் சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது. கொல்லம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 15 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவைகளின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த தடங்களில் பயணிக்கும் ரெயில் பயணிகளின் பயண நேரம் குறைந்துள்ளது.இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :