எல்லை கம்பிகளை அறுத்து ஊருவ முயன்றவர்களை இந்திய ராணுவம் விரட்டியடிப்பு
By: Nagaraj Fri, 16 June 2023 10:13:00 AM
ஜம்மு: ஊடுருவ முயன்றவர்கள் விரட்டியடிப்பு... ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கம்பிகளை அறுத்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றவர்களை ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஏ.கே. 47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், மொபைல் போன்கள், சார்ஜர்கள், உணவு மருந்துகள் உள்பட பலவகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எல்லை வழியாக தீவிரவாதிகளையும், தீவிரவாதிகளுக்கு உதவுவதற்கான பொருட்களையும் பாகிஸ்தான் உளவுத்துறையும் ராணுவமும் அனுப்பி வைப்பது வழக்கம்.
இம்முறை எல்லை முன்கள வீரர்கள் விழிப்புடன் இருந்ததால் பூஞ்ச் மாவட்டத்தில் பெரும் அளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.