Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்

By: Karunakaran Sat, 14 Nov 2020 6:35:42 PM

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும், இந்த உடன்பாட்டை பாகிஸ்தான் ராணுவம் ஒருபோதும் மதிக்காமல், இந்திய ராணுவ நிலைகளையும், மக்கள் வாழும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும் அங்கு பயிற்சி பெற்று காத்திருக்கும் பயங்கரவாதிகளை இந்தியாவின் அமைதியை சீர்குலைப்பதற்காக காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வதற்காக இந்திய படைகளை திசை திருப்பவும் இத்தகைய தந்திரங்களை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கோழைத்தனமான அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்து உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதல்கள் நேற்று எல்லை மீறிப்போனது. காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் தொடுத்தது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்களைப் போன்ற ஆயுதங்கள் கொண்டு இந்திய வீரர்கள் சரமாரியாக பதிலடி கொடுத்தனர்.

indian army,pakistan,terrorists,ammunition depots ,இந்திய ராணுவம், பாகிஸ்தான், பயங்கரவாதிகள், வெடிமருந்து கிடங்குகள்

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ரக பீரங்கிகள் என நவீன ஆயுதங்கள் மூலம் வலிமையான பதில் தாக்குதலை இந்திய வீரர்கள் அரங்கேற்றினர். இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது அவர்களின் ஏராளமான ஆயுத கிடங்குகள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் பல்வேறு பயங்கரவாத பயிற்சி தளங்கள் என ஏராளமான உடைமைகளும் நாசமாக்கப்பட்டன. ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்கே திரும்ப சென்றனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் அதற்கு இந்திய வீரர்களின் வலிமையான பதிலடி போன்ற நடவடிக்கைகளால் காஷ்மீர் எல்லையில் நேற்று பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இந்த ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே மிகவும் தீவிரமான எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடந்து உள்ளன. இந்திய இராணுவம் இதுகுறித்து பதிவிட்டு உள்ள பல வீடியோக்கள் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பல பாகிஸ்தான் முகாம்கள் அழிக்கப்பட்டதைக் காட்டுகின்றன.

Tags :