பொள்ளாச்சியில் மூன்று நாட்கள் நடக்கிறது சர்வதேச பலூன் திருவிழா
By: Nagaraj Fri, 13 Jan 2023 7:11:01 PM
கோவை: பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா... கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பலூன் திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டியில் இந்த ஆண்டு 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் சர்வதேச பலூன் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 3 நாட்கள் நடைபெறும்.
இந்த பலூன் திருவிழாவில் வெப்ப காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு தலா
ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து
உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 பலூன்கள்
பறக்கவிடப்பட்டன.
வெளிநாடுகளில் மட்டும் நடைபெறும்
இந்த பலூன் திருவிழா கடந்த சில வருடங்களாக இந்தியாவில் தமிழகத்தில்
மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பலூன் திருவிழாவை காண கேரளா,
கர்நாடகா, ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து
ஏராளமானோர் வருகின்றனர்.