Advertisement

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 552 பேர் வெளியேறினர்

By: Nagaraj Sun, 06 Sept 2020 6:48:27 PM

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 552 பேர் வெளியேறினர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 552 பேர்... முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 552 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொவிட்19 தொற்றை தடுக்கு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரையில் 37 ஆயிரத்து 552 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். மேலும் 7ஆயிரத்து 403 பேர், 70 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

corona,isolation,552,returned home ,கொரோனா, தனிமைப்படுத்தல், 552 பேர், வீடு திரும்பினர்

இதேவேளை ஆயிரத்து 880 பேருக்கு, பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 37ஆயிரத்து 610 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 121ஆக காணப்படுகின்றது. இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 918பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் 191பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 12பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|