Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் 5-ந்தேதி முதல் விமான சேவை தொடங்கும் - ஜோர்டான் அரசு

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் 5-ந்தேதி முதல் விமான சேவை தொடங்கும் - ஜோர்டான் அரசு

By: Karunakaran Tue, 28 July 2020 4:34:01 PM

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் 5-ந்தேதி முதல் விமான சேவை தொடங்கும் - ஜோர்டான் அரசு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான நாடுகளில் சர்வதேச விமான சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானிலும் சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், வரும் 5-ந்தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

jordan,corona impact,flights,jordanian government ,ஜோர்டான், கொரோனா தாக்கம், விமானங்கள், ஜோர்டானிய அரசு

இதுகுறித்து சிவில் விமான ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஹைதம் மிஸ்டோ கூறுகையில்,ஜோர்டான் மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், பிற நாட்டு மக்கள் ஜோர்டான் வருவதற்கும் இனி எந்த தடையும் இல்லை. ஜோர்டான் வரும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அதேபோல் ஜோர்டானில் இருந்து புறப்படும் மக்களும் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே விமானத்தில் அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். ஜோர்டானில் நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,168 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|