Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ...கடைசி தேதி ஜூன் 18 TNPSC தேர்வாணையம் அறிவிப்பு

தமிழகத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ...கடைசி தேதி ஜூன் 18 TNPSC தேர்வாணையம் அறிவிப்பு

By: vaithegi Sat, 18 June 2022 3:39:12 PM

தமிழகத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ...கடைசி தேதி ஜூன் 18 TNPSC தேர்வாணையம் அறிவிப்பு

தமிழகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கீழ்நிலைப் பணிகளின் கீழ், செயல் அலுவலர் பதவிக்கான ஆட்சேர்ப்புகளை நடத்தி வந்து கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மொத்தம் 36 காலியிடங்களுக்கு நடத்தப்பட இருக்கும் போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இன்றைக்குள் (ஜூன் 18) தங்களது ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு TNPSC தேர்வாணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இந்த காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூன் 18) வரை வரவேற்கப்பட்டுள்ளது.

trustee,executive officer,online,executive officer ,அறநிலையத்துறை ,நிர்வாக அதிகாரி,ஆன்லைன் ,எக்ஸிகியூட்டிவ் ஆபீசர்

முதலாவதாக TNPSC நிர்வாக அதிகாரி காலியிடங்களுக்கு கடந்த மே 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்து வருகின்றன . இப்போது இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (ஜூன் 18) முடிவுக்கு வருகிறது.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

முதலில் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை திறக்கவும்.
முகப்புப் பக்கத்தில் ‘அறிவிப்புகள்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது ‘எக்ஸிகியூட்டிவ் ஆபீசர், கிரேடு- IV (குரூப்- VIII சேவைகள்) (தமிழ்நாடு இந்து மதம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணை சேவை)’ என்பதன் கீழ் ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
TNPSC போர்ட்டலில் பதிவு செய்து உள்நுழையவும்.
கேட்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் நிரப்பவும்.
குறிப்பிடப்பட்ட ஆவணங்களை பதிவேற்றவும்.
கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.தேவைப்பட்டால் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

Tags :
|