ஆளுநரை சட்டத் துறை அமைச்சர் நாளை சந்திக்கவுள்ளார்
By: vaithegi Wed, 30 Nov 2022 11:06:00 PM
சென்னை: ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் நாளை சந்திக்கவுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பான சட்ட மசோதார் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இதற்கு ஒப்புதல் தராமல் இருந்து கொண்டு வருகிறார். இதனால் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் சில தினங்களுக்கு முன்பு தான் காலாவதி ஆனது. இதற்கு இடையே ஆளுநரிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்க தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நேரம் கேட்டிருந்தார்.
அந்த வகையில் நாளை ஆளுநரை அவர் சந்திக்கவுள்ளார். இதனை அடுத்து நாளை காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
எனவே இதில் ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆளுநர் ஆர்.என், ரவியிடம் அமைச்சர் ரகுபதி வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.