Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 25ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடக்காது; அமைச்சர் ஜானக வக்கும்புர தகவல்

வரும் 25ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடக்காது; அமைச்சர் ஜானக வக்கும்புர தகவல்

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:16:32 AM

வரும் 25ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடக்காது; அமைச்சர் ஜானக வக்கும்புர தகவல்

கொழும்பு: இராஜாங்க அமைச்சர் தகவல்... உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 25ம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.

local government,elections,notice,provincial councils,minister,information ,உள்ளூராட்சி, தேர்தல், அறிவிப்பு, மாகாண சபைகள், அமைச்சர், தகவல்

அத்தோடு எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Tags :
|