Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்

By: Karunakaran Wed, 01 July 2020 1:47:16 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்

ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம், அரியானா போன்ற வட இந்திய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் விவசாய நிலங்களில் மருந்து தெளித்து வருகின்றன.

இருப்பினும் வெட்டுக்கிளிகள், பயிர்களை தின்று தீர்ப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருகின்றன. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

rajasthan,locust attack,farmers,agricultural land ,ராஜஸ்தான், வெட்டுக்கிளி தாக்குதல், விவசாயிகள், விவசாய நிலம்


நேற்று ஜெய்சால்மரில் கூட்டம் கூட்டமாக வந்த வெட்டுக்கிளிகளை டிரோன்கள் மூலம் மருந்து தெளித்து அழித்தனர். இதேபோல் நகாவூர் பகுதியிலும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பரவிய வெட்டுக்கிளிகளை பொதுமக்கள் பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பி விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஓரளவு பயிர்களை காப்பாற்ற முடிந்தது.

இருப்பினும் இரவு நேரங்களில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் கலெக்டர் கூறுகையில், இது வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்க காலம். எனவே பிரச்சினை இன்றும் அதிகரிக்கப் போகிறது. வெட்டுக் கிளிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :