- வீடு›
- செய்திகள்›
- 10 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் தகவல்
10 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் தகவல்
By: Nagaraj Thu, 18 June 2020 8:02:27 PM
பொதுமக்கள் காணிகள் விடுவிப்பு... யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு உள்ளதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும் தற்போது காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி மற்றும் முப்படை உயரதிகாரிகள் தலைமையில் பலாலியில் உயர் மட்ட கூட்டமொன்று நேற்று இடம்பெற்றது.
இது தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“இராணுவத்தினராகிய நாங்கள் பாதுகாப்பு விடயம் தொடர்பாக மிகவும்
அக்கறையாகவும் தெளிவாகவும் செயற்பட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு விடயம்
குறித்து செயற்பட்டு வருகின்றார்.
அவர் பதவியேற்ற குறுகிய
காலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு
பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில்
மட்டுமல்லாது கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இதுபோன்ற விசேட
கூட்டங்கள் முப்படையினருடன் இடம்பெற்று வருகின்றன.
இருந்தபோதும்,
கடந்த டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில்கூட பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் மற்றும் முப்படையின் பிரதானிகளுடன் யாழ். மாவட்டத்தில் கூட்டம்
இடம்பெற்றது. எனவே நேற்றைய தினம் விசேடமாக ஒன்றும் பேசப்படவில்லை. அதிலும்
குறிப்பாக காணி விடுவிப்பு பற்றி எந்த விடயமும் அதில் பேசப்படவில்லை.
ஏனெனில் நாங்கள் இதுவரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொதுமக்களின்
காணிகளை விடுவித்துள்ளோம். எங்களால் விடுவிக்கப்படக்கூடிய அனைத்து
இடங்களையும் விடுவித்துள்ளோம்.
எனினும் எதிர்காலத்தில் பொதுமக்களின்
காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய
நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை”
என அவர் தெரிவித்தார்.