சவுதி அரேபியாவில் நடுக்கடலில் திமிங்கலம் மீது சவாரி செய்த நபர்
By: Nagaraj Sun, 23 Aug 2020 6:53:12 PM
திமிங்கலம் மீது சவாரி... நடுக்கடலில் திமிங்கலத்தின் மீது குதித்து அதன் மீது படுத்துக்கொண்டே சவாரி செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் யான்பு பகுதியை சேர்ந்த ஒருவர் ரெட் சீ பகுதியில் படகில் இருந்து திமிங்கலத்தின் மீது குதித்து அதன் மீது படுத்து சிறிது தூரம் செல்கிறார். அந்த வீடியோவை ஆலல்வானி அப்துல்லா என்ற நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 45 விநாடிகளே உள்ள வீடியோவில், படகில் சென்ற ஒரு நபர் இரண்டு திமிங்கலங்கள் வருவதை பார்க்கிறார்.
முதல் திமிங்கலம் நெருங்கி வரும்போது, அவர் அதன் முதுகில் செல்ல
முயற்சிக்கிறார், ஆனால் வாய்ப்பை இழக்கிறார். அவர், பின்னர் விரைவாக
இறங்கி, மற்ற திமிங்கலத்தின் பின்புறத்தில் படுத்து, அதன் மீது சவாரி
செய்கிறார்.
இந்த வீடியோவை நிறைய பேர் ரீடிவீட் செய்யத் தொடங்கியது
மட்டுமல்லாமல், சுமார் 14 ஆயிரம் பேர் அந்த வீடியோக்களை பார்த்துள்ளனர்.
பலர் அந்த நபரைப் பார்த்து ஆச்சரியமடைந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சிலர்,
"இந்த திமிங்கலத்தில் பல் இல்லை, எனவே மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது.
இது முக்கியமாக அதன் உணவில் உள்ள நுண்ணிய உயிரினங்களை சார்ந்துள்ளது"
என்று குறிப்பிட்டுள்ளனர்.