Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலையானதாக கருதி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்தார்

கொலையானதாக கருதி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்தார்

By: Nagaraj Sat, 12 Sept 2020 09:08:59 AM

கொலையானதாக கருதி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்தார்

கொலை செய்யப்பட்டதாக கருதி அடக்கம் செய்யப்பட்டவர் ஐந்து மாதங்களுக்கு பின்னர் உயிருடன் வீட்டுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் அவரது இரண்டு சகோதரர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட அந்த கூலி தொழிலாளி ஐந்து மாதங்கள் கழித்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தன்னால் வீடு திரும்பவில்லை என்று அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

stir,dead,5 months,came alive ,பரபரப்பு, இறந்தவர், 5 மாதம், உயிருடன் வந்தார்

இதனை அடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த போது போலீசார் அவரது இரண்டு சகோதரர்களை துன்புறுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் போலீசார் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்டது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஐந்து மாதங்கள் கழித்து அந்த பிணத்தை தோண்டி எடுத்து அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|