Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊடகங்கள் அனைத்தும் கொரோனா பற்றியே விவாதித்து வருகிறது - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

ஊடகங்கள் அனைத்தும் கொரோனா பற்றியே விவாதித்து வருகிறது - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

By: Karunakaran Wed, 07 Oct 2020 09:15:09 AM

ஊடகங்கள் அனைத்தும் கொரோனா பற்றியே விவாதித்து வருகிறது - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இன்னும் அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

2-வது முறையாக வெற்றி பெற்று விடலாம் என டொனால்ட் டிரம்ப் நினைத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் அவரது நினைப்பை நொறுக்கியது. டொனால்டு டிரம்பின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலி கொடுக்க வேண்டியதாயிற்று என எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்திலும் கொரோனா குறித்த டிரம்பின் நடவடிக்கை குறித்தே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

media,corona virus,america,trump ,மீடியா, கொரோனா வைரஸ், அமெரிக்கா, டிரம்ப்

ஊடகங்களும் கொரோனா விவகாரத்தில் டிரம்பின் நடவடிக்கை குறித்துதான் விவாதித்து வருகின்றன. இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், வேலை வாய்ப்பு, ஸ்டாக் மார்க்கெட், பொருளாதாரம் ஆகியவை டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் எப்படி சிறப்பாக இருந்தது என்பதை விவாதிக்க பொய் செய்தி ஊடகங்கள் மறுக்கிறது. விரைவில் நாங்கள் புள்ளி விவரத்துடன் வருவோம் என்று கூறினார்.

மேலும் அவர், அவர்கள் அனைவரும் கொரோனா குறித்து விவாதிக்க விரும்புகிறார்கள். அவர்களால் சொல்ல முடியாது, ஆனால், நாங்கள் எதிர்க்கட்சியை வீழ்த்துவோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலான நேரங்களில் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டுவதை வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|