Advertisement

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்

By: Nagaraj Sat, 05 Nov 2022 10:59:41 PM

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அவை தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.


Tags :
|