மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடக்கம்
By: vaithegi Thu, 15 Dec 2022 11:23:35 AM
சென்னை: 6 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்கியது ... அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 23ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதனை அடுத்து 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 ,9 , 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே அதன்படி இன்று முதல் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.
அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வினாத்தாள் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நாளான இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வுகளுக்கு பின்னர் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.