Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மாதங்களில் போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 2,000 புதிய பேருந்துகள் வர உள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

அடுத்த 3 மாதங்களில் போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 2,000 புதிய பேருந்துகள் வர உள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Sat, 30 Sept 2023 5:27:42 PM

அடுத்த 3 மாதங்களில் போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 2,000 புதிய பேருந்துகள் வர உள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

சென்னை: இன்னும் 3 மாதங்களில் 2,000 புதிய பேருந்துகள் ... இந்தியாவில் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகளை இயக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக போக்குவரத்து துறை புதிய பேருந்துகளை வாங்கவும் பழுதடைந்த பேருந்துகளை சரி பார்க்கும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

minister,transport,bus ,அமைச்சர் ,போக்குவரத்து ,பேருந்துகள்

அதில் பங்கேற்று பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், இன்னும் 3 மாதங்களில் போக்குவரத்து துறைக்கு புதிதாக 2000 பேருந்துகள் வர உள்ளதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து பேசிய அவர், தற்போது பணியாளர்களின் பற்றாக்குறையால் ஊழியர்களின் பணி சுமை அதிகரித்து உள்ளது.

அதற்கு தீர்வு காணவே தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. பணி ஓய்வு பலன்களை பெறாதவர்களுக்காக ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :