Advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர்

By: Nagaraj Sun, 13 Nov 2022 10:05:06 PM

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர்

பொன்னேரி: கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தேவையான முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு பாடியநல்லூர் விச்சூர் வெள்ளிவாயல் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பால்வளத் துறை அமைச்சர் நாசர், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

minister,flood control,works,visited,dairy department ,அமைச்சர், வெள்ளப்பாதிப்பு, பணிகள், பார்வையிட்டனர், பால்வளத்துறை

அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர்.


சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags :
|