மருத்துவமனையில் கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்
By: Nagaraj Mon, 31 Aug 2020 08:27:41 AM
கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்... புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றபோது, கழிவறையின் நிலையைப் பார்த்து அவரே சுத்தம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதுவரை, 13,500 பேருக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 9,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 220 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
குணமடையாமல் 4834 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருவதால்
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பலவும்
நிரம்பியுள்ளன.
இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேச
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மருத்துவமனைகளில்
அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
நோயாளிகளிடம் மருத்துவர்களின் அணுகுமுறை, உணவு, வசதி குறித்தும் கேட்டுத்
தெரிந்துகொண்டார். அப்போது நோயாளிகள் சிலர் கழிவறை குறித்து புகார்
அளித்தனர்.