பாதுகாப்பு, தொழில்நுட்ப அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ் வந்தன
By: Nagaraj Fri, 27 Nov 2020 7:22:41 PM
பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொதுப் பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அத்துடன், அமைச்சர் சமல் ராஜபக்ச உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags :