Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 நாட்கள்விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடுகிறது

2 நாட்கள்விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடுகிறது

By: vaithegi Mon, 24 July 2023 10:02:42 AM

2 நாட்கள்விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடுகிறது

இந்தியா: மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் ஆயத்தம் .. டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ( ஜூலை 20) அன்று தொடங்கியது. மணிப்புர் கலவரம் மற்றும் அங்கு பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய நேர விவாதத்துக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிப்பார் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், நேரக் கட்டுப்பாடின்றி அனைத்துக் கட்சிகளும் பேசி விவாதம் நடத்த வேண்டும் என்பதிலும் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.

monsoon session of parliament,opposition parties , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,எதிர்க்கட்சிகள்

இதனை அடுத்து இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கூட்டத்தொடரின் முதல் 2 நாட்களும் எந்த அலுவல் பணிகளும் மேற்கொள்ளாமல் இரு அவைகளும் முடங்கின. 2 நாட்கள் முடக்கம், 2 நாட்கள் விடுமுறைக்குப் பின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடுகிறது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், இன்று (திங்கட்கிழமை) மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த ஆயத்தமாகியுள்ளன.

Tags :