மாமியார் கொடுத்து அசத்திய விருந்து... திகட்ட திகட்ட சாப்பிட்ட வருங்கால மாப்பிள்ளை
By: Nagaraj Sun, 09 Oct 2022 06:34:45 AM
ஆந்திரா: 125 வகை உணவு விருந்து... வருங்கால மருமகனிற்கு 125 வகை உணவு வகைகளால் விருந்தளித்து மணமகள் குடும்பத்தினர் அசத்தியுள்ளனர். இதில் வருங்கால மருமகன் திக்குமுக்காடி போய்விட்டார்.
ஆந்திரா, சிருங்கவரபுகோட்டா நகரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான கபுகந்தி சைதன்யாவுக்கும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிஹாரிகாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது.
நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் வரும் முதல் தசரா விருந்துக்கு மருமகனை வீட்டிற்கு அழைத்துள்ளனர், மணமகள் நிகாரிகா குடும்பத்தினர். இதனையடுத்து அவருக்கு 125 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த ஏற்பாட்டைக் கண்ட சைதன்யா ஆச்சரியமடைந்தார். திக்கு முக்காடி போயிவிட்டார். மாப்பிள்ளை அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து சென்றுள்ளார்.
இதில் குறிப்பு என்னவென்றால் அந்த மாப்பிள்ளைக்கு தான் சாப்பிட்ட பல
உணவுகளின் பெயர் கூட தெரியாது என்பது தான். ஆனால் ருசியாக இருக்கிறது என
வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக மாப்பிள்ளை பாராட்டியுள்ளார்.
இந்தச்
சம்பவம் கேட்க இனித்தாலும், அதிகம் சாப்பிட்டால் திகட்ட தானே செய்யும்.
மேலும் இதுபோல் ஒரு மாபெரும் விருந்தை எதிர்பார்க்கவில்லை எனவும் வருங்கால
மாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த விருந்தில் 95 வகை உணவுகள் வெளியில் இருந்து வாங்கியும்,
மற்றவை
அனைத்தும் வீட்டில் செய்தும் என மொத்தம் 125 வகையான உணவு வகைகள்
பரிமாறப்பட்டன. இந்தச் செயல் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது