மகன் கண் முன்பே கரடி தாக்கி பலியான தாய்
By: Nagaraj Wed, 26 Aug 2020 5:30:31 PM
மகனின் கண் எதிரிலேயே கரடி தாக்கி தாய் பலியான சம்பவம் நடந்துள்ளது.
கனடாவில் உள்ள Buffalo Narrows என்ற கிராமத்தில் உள்ள மர வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக வந்திருந்த Stephanie Blais (44), தன் தந்தையான Hubert Esquirolஉடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த மர வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால், அதை தன் கணவர் சரி செய்துகொண்டிருப்பதாக தொலைபேசியில் தன்னிடம் கூறிக்கொண்டிருந்த Stephanie, தன் மகன் Eliயிடம் (9) வீட்டுக்குள் போய் ஒரு ஆண்டென்னாவை எடுத்துவா என்று கூறியதாக தெரிவிக்கும் Hubert, அதற்குப்பின் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டதாகவும், அதுதான் தன் மகள் தன்னிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்கிறார்.
உண்மையில் நடந்தது என்னவென்றால், தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த Stephanieயை
திடீரென கரடி ஒன்று தாக்கியிருக்கிறது. அவரது கழுத்தை கரடி
தாக்கியதால்தான் அவரால் தந்தையுடன் தொடர்ந்து பேசமுடியாமல் போயிருக்கிறது.
இதற்கிடையில்,
வீட்டுக்குள் சென்ற Stephanieயின் மகன் Eli, ஏதோ வித்தியாசமான சத்தம்
கேட்பதை கவனித்து திரும்பிப் பார்க்க, அங்கே கரடி ஒன்று தன் தாயை தாக்குவதை
பார்த்து அச்சத்தில் உறைந்து போய் விட்டான்.
மகன் கண் எதிரிலேயே தாய் கரடியால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அந்த குழந்தையை வாழ்நாளெல்லாம் அச்சுறுத்தலாம்.