ராகுல் காந்தி மீதான நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை
By: Nagaraj Sat, 25 Mar 2023 11:28:11 PM
மும்பை: ராகுல் காந்தி மீதான நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொள்ளையர்கள் வெளியூர் செல்லும் போது, திருடனை திருடன் என்று அழைப்பது குற்றம். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை.
அனைத்து விசாரணை அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலம் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.