சித்ரா தற்கொலை வழக்கில் தொகுப்பாளர் ரக்சன் பெயரும் சிக்குகிறது
By: Nagaraj Wed, 16 Dec 2020 4:18:33 PM
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்சனின் பெயரும் அடிபடுகிறது. இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சி அலை ஏற்பட்டுள்ளது.
சித்ரா தற்கொலை வழக்கு இதுவரை புதிராகவே இருந்து வருகிறது. வழக்கு தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள் கிழமை சித்ராவின் பெற்றோரிடமும், நேற்று ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது.
ஹேம்நாத் கைதானதால் ஆர்டிஓ விசாரணை நடத்த தாமதமாகிறது. இதனிடையே எம்எல்ஏ ஒருவருக்கு இந்த தற்கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் சித்ராவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் இந்த வழக்கிற்குள் வந்துள்ளார்.
ரக்சன் சித்ராவுடன் டேட்டிங் சென்றிருந்தார் என்றும், அப்போது போட்டோ,
வீடியோக்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
சித்ராவின் செல்போனில் இருந்த
தடயங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் அதனை சைபர் வல்லுநர்கள்
மீட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் டேட்டிங் சென்றபோது எடுத்த
போட்டோக்கள், வீடியோக்களை காட்டி ரக்சன், சித்ராவை மிரட்டியதாக தகவல்
வெளியாகியுள்ளது.
எனவே அவரும் விசாரணை வளையத்திற்குள் வருவதற்கான
வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.