Advertisement

சென்னையில் தேசிய இளைஞர் பார்லிமென்ட் விழா நடந்தது

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:53:57 AM

சென்னையில் தேசிய இளைஞர் பார்லிமென்ட் விழா நடந்தது

சென்னை: தேசிய இளைஞர் பார்லிமென்ட் விழா... நேரு யுவகேந்திரா சங்கத்தின் மாநில இயக்குனரகம் சென்னை, மாநில நலப்பணித் திட்ட மண்டல இயக்குனரகம் சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து, மாநில அளவிலான தேசிய இளைஞர் பார்லிமென்ட் விழாவை எம்ஐடி வளாகத்தில் நடத்தின.

இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் காணொலி மூலம் பேசுகையில், சமூக பிரச்சனைகளை கண்டறிந்து, விவாதம், பதிவு செய்தல், அது தொடர்பான முடிவுகள் எடுப்பது இந்த தேசிய இளைஞர் பாராளுமன்றத்தில் நடைபெறும்.

சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும், நல்ல சமூக அமைப்பை உருவாக்கவும் மேம்படுத்தவும் இளைஞர் பாராளுமன்ற அமைப்பு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்றும் இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

national,problems,state welfare,tamil nadu, ,அமைச்சர், இளைஞர், காணொலி, சென்னை

78 போட்டியாளர்களில் முதல் மூன்று பரிசு பெற்றவர்கள் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும் தேசிய நாடாளுமன்றப் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.

மாநில அளவிலான வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம். வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஹசன் மௌலானா, என்.எஸ்.எஸ்.மண்டல இயக்குநர் டாக்டர்.சி.சாமுவேல் செல்லையா, நேரு யுவகேந்திர சங்கத்தின் மாநில இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags :