Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது

By: vaithegi Sun, 17 July 2022 3:13:47 PM

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி 2022-23-ம் கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுதுகின்றனர்.

neet,entrance exam , நீட் ,நுழைவுத்தேர்வு

இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுதுகின்றனர். வழக்கம் போல, இந்த ஆண்டும் 'நீட்' தேர்வு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tags :
|