Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது

நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது

By: vaithegi Sun, 07 May 2023 09:50:21 AM

நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி கொண்டு வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்காண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தாண்டு இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இன்று தேர்வு நடப்பதை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3-ம் தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அந்த நுழைவு சீட்டில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

neet entrance exam admit card , நீட் நுழைவுத் தேர்வு ,நுழைவுச் சீட்டு

நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இதையடுத்து இது தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவியருக்கும் இணையதளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்துயிருந்தது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது. இது தொடர்பான முழு விவரங்களும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போன்று இத்தேர்வில் கடுமையான கெடுபிடிகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் முன்னதாக 1 மணி நேரத்துக்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் ஆவார்கள்.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படும் மையங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இன்று அதிகாலை முதலே மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இவற்றையெல்லம் நன்கு தெரிந்து கொண்டு மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லும் பட்சத்தில் கடைசி நிமிட அவதியிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள முடியும். மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பான மையங்களை https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags :