Advertisement

‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

By: vaithegi Fri, 05 May 2023 09:47:22 AM

‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், இளங்கலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு நாளை மறுநாள் பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

examination,students,india ,நீட்தேர்வு,மாணவ,மாணவிகள்

இதில் தமிழகத்தில் சுமார் 1½ லட்சம் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். 'நீட்' தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டு உள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Tags :