Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் பாஜகவில் சேர்வதாக வந்த செய்தி தவறு... திருச்சி முன்னாள் மேயர் விளக்கம்

நான் பாஜகவில் சேர்வதாக வந்த செய்தி தவறு... திருச்சி முன்னாள் மேயர் விளக்கம்

By: Nagaraj Fri, 13 Oct 2023 4:26:30 PM

நான் பாஜகவில் சேர்வதாக வந்த செய்தி தவறு... திருச்சி முன்னாள் மேயர் விளக்கம்

திருச்சி: முன்னாள் மேயர் சாருபாலா பா.ஜ.க.வில் சேரப் போவதாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிய வந்துள்ளது. திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான். தமாகா சார்பில் 2001 மற்றும் 2006-ல் திருச்சி மேயராக இருந்தார்.

2009-ல் திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து 2016-ல் அ.தி.மு.க.வில் இணைந்த சாருபாலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி.தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்தார். இப்போது அ.ம.மு.க.வின் அமைப்புச் செயலாளராக உள்ளார்.

excitement,organization,secretary join ,அமமுக, சாருபாலா, திருச்சியில் பரபரப்பு

கடந்த மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சாருபாலாவின் மகன் பிருத்வி ராஜ். துப்பாக்கி சுடும் வீரர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், ட்ராப் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

இந்நிலையில், சாருபாலா பா.ஜ.க.வில் சேரப் போவதாகவும், அவரை திருச்சி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வைக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அண்ணாமலை நடைபயணத்தின் அடுத்தக்கட்டத்தில் சாருபாலா பா.ஜ.க.வில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சாருபாலா கூறுகையில், நான் பா.ஜ.க.வில் சேரப் போவதாக வெளியான தகவல் உண்மையில்லை. அ.ம.மு.க.வில் தான் இருப்பேன் என்றார்.

Tags :