Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது

அடுத்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது

By: vaithegi Wed, 27 July 2022 6:47:28 PM

அடுத்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை: ஜூலை மாதம் நிறைவடைய இன்னும் 3 நாட்கள் தான் இருக்கின்றன. அடுத்ததாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வங்கி அமைப்பு என பல தொடர்பான மாற்றங்கள் வர இருக்கிறது. தற்போது என்னென்ன விதிமுறைகள் மாற்றமடையவுள்ளன என்பதனை பார்க்கலாம்.

இதை அடுத்து பாங்க் ஆஃப் பரோடாவில் காசோலை மூலமாக பணம் செலுத்துவதற்கான விதிமுறைகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாற்றப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேலான காசோலைகளுக்கு நேர்மறை ஊதிய முறை அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

cooking gas,price ,சமையல் எரிவாயு,விலை

மேலும், ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டரின் விலை முறையாக திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதே மாதிரி, அடுத்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 20 முதல் 30 ரூபாய் வரைக்கும் உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது. கடந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.30 வரைக்கும் சிலிண்டரின் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது.

Tags :