கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரிப்பு
By: Nagaraj Mon, 23 Jan 2023 6:40:07 PM
புதுடெல்லி: நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 015- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. இதனை அடுத்து தற்போது கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள்
எண்ணிக்கை 1,934- ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82
ஆயிரத்து 015- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர்
உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,735- ஆக
அதிகரித்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.11 ஆகவும்
வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதம் ஆகவும் உள்ளது. இந்தியாவில்
இதுவரை மட்டும் கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியவர்கள்
எண்ணிக்கை 220.28 கோடி டோஸாக அதிகரித்துள்ளது.