Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் நேற்று 9,062 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,608 ஆக உயர்வு

இந்தியாவில் நேற்று 9,062 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,608 ஆக உயர்வு

By: vaithegi Thu, 18 Aug 2022 10:35:35 AM

இந்தியாவில் நேற்று 9,062 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,608 ஆக  உயர்வு

இந்தியா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாகவே அதிகரித்து வந்த தினசரி பாதிப்பு நேற்று சற்று குறைந்தது. இந்நிலையில் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 12 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது.

இதை அடுத்து நேற்று 9,062 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,608 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 16,251 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,36,70,315 ஆனது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,05,058 லிருந்து 1,01,343 ஆக குறைந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதை தொடர்ந்து கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக பதிவானது. இந்தநிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 206 பேர் இறந்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,08,95,79,722 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38,64,471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்களை தெரிவித்துள்ளது.

Tags :
|