நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,123 ஆக உயர்வு
By: Monisha Thu, 23 July 2020 11:30:23 AM
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 2,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் 151 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து மாநிலத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக தற்போது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 2,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,881 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இன்று ஒரே நாளில் நெல்லை மாவட்டத்தில் 151 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,123-ஆக உயர்ந்துள்ளது.