தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக உயர்வு
By: Monisha Sat, 18 July 2020 09:54:36 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மொத்தம் 4,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 47,539 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 லிருந்து 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 47,782 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நேற்று மட்டும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 14வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:-
அரியலூர் 10
செங்கல்பட்டு 125
சென்னை 1243
கோயம்புத்தூர் 141
கடலூர் 44
தர்மபுரி 40
திண்டுக்கல் 163
ஈரோடு 3
கள்ளக்குறிச்சி 58
காஞ்சிபுரம் 110
கன்னியாகுமரி 151
கரூர் 12
கிருஷ்ணகிரி 17
மதுரை 263
நாகப்பட்டினம் 2
நாமக்கல் 46
நீலகிரி 52
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 75
ராமநாதபுரம் 82
ராணிப்பேட்டை 55
சேலம் 61
சிவகங்கை 81
தென்காசி 65
தஞ்சாவூர் 117
தேனி 175
திருப்பத்தூர் 8
திருவள்ளூர் 220
திருவண்ணாமலை 145
திருவாரூர் 15
தூத்துக்குடி 189
திருநெல்வேலி 119
திருப்பூர் 28
திருச்சி 100
வேலூர் 183
விழுப்புரம் 113
விருதுநகர் 196