அந்தமானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,081 ஆக உயர்வு
By: Karunakaran Mon, 31 Aug 2020 1:17:32 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வது சற்று ஆறுதலடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிற பகுதிகளைப்போல அந்தமான்-நிகோபார் தீவுக்கூட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
அந்தமான்-நிகோபார் தீவுக்கூட்டங்களில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர் நேற்று உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கையும் 44 ஆக அதிகரித்தது.
அந்தமானில் தொற்று பாதித்தவர்களில் 2,519 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்புடைய 518 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் அங்குள்ள பல்வேறு முகாம்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் அங்குள்ள ஏராளமான பழங்குடியினர் பயன்பெற்று வருகின்றனர். இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.