தேனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,247 ஆக உயர்வு
By: Monisha Tue, 28 July 2020 10:09:28 AM
தேனியில் ஏற்கனவே 4,053 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனாவில் இதுவரை மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 4,053 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 194 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தேனியில் 2,042 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.