பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Sun, 09 Aug 2020 10:52:55 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியைக் கடந்துள்ளது. 7.27 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.26 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில் அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போது, பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பிரேசிலில் தற்போது கொரோனா பாதிப்புடைய சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.