Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்தது

பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Sun, 20 Sept 2020 11:46:05 AM

பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200 மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.

corona virus,brazil,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பிரேசில், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பிரேசிலில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.36 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை நெருங்குகிறது. சுமார்.75 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.


Tags :
|